districts

சென்னை முக்கிய செய்திகள்

குளோரைடு அரிப்பு: புதிய குடியிருப்பு கட்டித்தர கட்டுமான நிறுவனம் ஒப்புதல்

சென்னை, பிப் .3- சென்னை ஐ.ஐ.டி.  நிபுணர்கள் குழு பரிந் துரையை ஏற்று ‘ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர்’ அடுக்கு  மாடிக் குடியிருப்பு வளா கத்தை இடித்து, புதிதாக கட்டித் தர  அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.  சுமார் 600 வீடுகள் கொண்ட இந்த அடுக்கு மாடி வளாகத்தில் குளோ ரைடால் தூண்டப்பட்ட அரிப்பின் அளவை மதிப்பிடு வதற்கும், நீண்ட கால தீர்வை பரிந்துரைப்பதற்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் நிறு வனத்தை ஜெயின் ஹவு சிங் நியமித்திருந்தது.  ஐ.ஐ.டி.  பரிந்துரையின் அடிப்படையில் அடுக்க கத்தை பழுதுபார்ப் பதற்கோ, மீண்டும் கட்டவோ ஒப்புக்கொண்ட இந்த நிறுவனம் அடுக்கக  உரிமையாளர்கள் சங்கத்து டன் கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டி ருந்தது. இந்த நடவடிக்கை ஜெயின் ஹவுசிங் நிறுவ னத்தின்  வெளிப்படைத் தன்மை மற்றும் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் பொறுப்புடைமையை வெளிப்படுத்துவதாக நிறு வனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

திருத்தணி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1.31 கோடி வருவாய்

திருத்தணி, பிப்.. 3- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம்  மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநி லங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் பணம், நகை, பொருட்களை காணிக்கை யாக செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் உண்டி யல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பாதுகாப்புடன்  காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த 28 நாட்களில்  பக்தர்கள் ரூ.1 கோடியே 31 லட்சத்து 82 ஆயிரத்து 988 ரூபாய்  பணம், 711 கிராம் தங்கம், 8 ஆயிரத்து 880 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அஞ்செட்டி மாணவிக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி,பிப்.3-  மாநில அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இதில் ‘இணைய கருத்துருவாக்கம்’ என்ற போட்டியில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி முதல் பரிசு பெற்றார். பின்னர் நடந்த விழாவில் மாணவி பிரியதர்ஷினி க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு சான்று, கேடயம், பரிசு வழங்கினார்.  இதைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாணவிக்கு அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ் உள்ளிட்டோர் ஆடை அணிவித்து கவுரவித்தனர்.

கொண்டனர்.  அருந்ததிய மக்கள்:  மாற்று வீடு வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, பிப்.3-  திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக  காமராஜர் நகரில் வசிக்கும் அருந்ததிய மக்கள் நிலத்தை கொடுத்தர்.  இதைத் தொடர்ந்து, அந்த மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுத்தனர். அதில் 6 குடும்பங்களுக்கு இடமும் வீடு கட்டித்தரவில்லை. இதையடுத்து தலித் இயக்கத் தலைவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை வைத்தனர். நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், 6 குடும்பங்களுக்கும் விரைவாக வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலரை சந்திக்குமாறு அறிவுறுத்தினார்.அதனடிப்படையில், தலித் விடுதலை இயக்க தலைவர்கள், பயனாளிகளும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம்: அமைச்சர்

சென்னை,பிப்.3- மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.  இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவியல் மனப்பான்மை என்பது, யார் சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரியானதோ அதை ஏற்றுக் கொள்வது. பகுத்தறிவது” என்ற தந்தை பெரியார் பாதையில் நடைபோட்ட  அண்ணாவின் நினைவு நாளில் “அறிவியலைக் கொண்டாடுவோம்” எனும் கலந்துரையாடல் நிகழ்வை தொடங்கி வைத்தோம். சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் டார்வின் அறிவியல் மன்றமும் இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தோம். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான உலோக சிலைகள் கண்டுபிடிப்பு

சென்னை, பிப்.3- சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும் இதுதொடர்பாக சிற்பக் கூட உரிமை யாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள், முக்கிய சிலை வியாபாரியான லட்சுமி நாராயணன் என்பவரை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், மாமல்லபுரத்தில் பழங்கால சிற்ப சிலைகளை ரகசிய வியாபாரம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாமல்லபுரம் சென்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள், மாமல்லபுரம் தனி யார் சிற்ப கூடத்தில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 8 உலோக சிலைகள் பறிமுதல் செய்தனர். மேலும், சிற்பக் கூட உரிமையாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரை கைது செய்தனர். இது குறித்து காவலர்கள் கூறியதாவது:- கைது செய்யப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மன், சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் கூட்டாளிதான். அவரி டம் இந்த சிலைகள் எங்கிருந்து கடத்திக் கொண்டு வரப் பட்டது என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.