திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், திமுக மாவட்டப் பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.