மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் மாநில அரசு பதவி விலக கோரி வியாழனன்று (ஜூலை 27) சிந்தாதரிப்பேட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை கிளைச் செயலாளர் எஸ்.குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் கவிதா கஜேந்திரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.கபாலி, நா.வீரப்பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.