districts

குழந்தைகள் கடத்தல் 3 மணி நேரத்தில் மீட்பு

செங்கல்பட்டு, ஜூன் 2-

     செங்கல்பட்டு மாவட்டம், ராட்டின கிணறு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தெருவோரத்தில் வசிப்பவர் குமார். இவரது மனைவி அமுதா. இவர்களது 3 வயது மகள் சித்ரா, ஒன்னறை வயது மகன் சந்தோஷ். வியாழ னன்று இரவு அவர்கள் வழக்கம் போல் மேம்பாலத்தின் கீழ் தூங்கினர்.

    நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அருகில் தூங்கிய குழந்தைகள் சித்ரா, சந்தோஷ் மாயமாகி இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அருகில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் தெருவோரத்தில் தங்கி இருக்கும் இம்ரான் (எ) மீரான் என்பவரும் மாயமாகி இருந்தார். மேலும் அவர் குழந்தைகளை கடத்தி சென்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  வெள்ளியன்று இம்ரான், கடத்தப்பட்ட 2 குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சென்று குழந்தைகள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.