districts

img

வறுமையால் குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு தடுத்து நிறுத்திய பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

சிதம்பரம், மே. 12-

   சிதம்பரம் அருகே குடும்ப வறுமைக் காரணமாக, இருளர் பழங்குடி மாணவிக்கு நடக்க இருந்த கட்டாய குழந்தை திரு மணத்தை தடுத்து நிறுத்திய பேரூ ராட்சி மன்றத் துணைத் தலைவர், அந்த மாணவியின் கல்வி செலவை யும் ஏற்றுக்கொண்டார்.

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை தளபதி நகரை சேர்ந்த மீனா, ராஜா தம்பதி களுக்கு துர்கா(17), சந்தியா(11), ஹரிஹரன் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளார்.  இதில் துர்கா கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்குச் செல்கிறார்.

  இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அக்கா மகன் அஜித் (18) என்பவ ருக்குத் துர்காவை வறுமையின் காரணமாகச் சிறுவயதில் திருமண பந்தம் பேசி முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

  கோடை விடுமுறையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள உற வினர் வீட்டுக்கு ராஜா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அஜித் குடும்பத்தையும் வரவழைத்துத் திருமண ஏற்பாடு களை செய்திருக்கிறார். இதில் உடன்பாடு இல்லாத துர்கா, யாரிடமும் செல்லாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.  

   அப்பொழுது, அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் இந்தச் சிறுமியிடம் விசாரணை செய்திருக்கிறார். அப்போது, நடந்த விபரங்களை கூறியிருக்கிறார். பிறகு, அந்த சிறுமி துர்காவை சிதம்பரத்தில் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்கள்.

  சிதம்பரத்தில் இருந்து அந்த சிறுமி, கிள்ளை தளபதி நகர் கிராமத் தலைவர் சின்னமணி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் நடந்தை கூறியதுடன், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரி வித்திருக்கிறார். இந்த தகவலை அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், துர்காவின் தந்தை ராஜாவை செல்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

  இதனையடுத்து, ராஜாவும் அவரது மனைவியும் உடனடியாக சொந்த ஊருக்கு குடும்பத்துடன் திருப்பியுள்ளனர். பின்னர், இருவருக்கும் அறிவுரை வழங்கிய துடன், கல்லூரி படிப்பு முடிக்கும் வரைக்கும் துர்காவின் கல்விக் கட்டணம் முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். எனவே,துர்காவின் படிப்புக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று ஆலோசனை கொடுத்தார். மேலும், கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகு, திருமணத்திற்கும் உதவி செய்வ தாகவும் உறுதியளித்தார்.  

  ரவீந்திரனின் இந்த ஆலோ சனைகளை பெற்றோர் ஏற்றுக் கொண்டதால், கிள்ளை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை யாசிரியரிடமும் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். அந்த ஆசிரியரும், சிறுமியின் பள்ளி படிப்புக்கான இதர செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரி வித்துள்ளார். இதனால், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்க ளிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.