districts

img

பாம்பு கடித்து குழந்தை பலி

அணைக்கட்டு, மே 27-

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி அத்தி மரத்து கொல்லை கிராமத்தில் வசிப்பவர் கூலி தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. இவர்களது மகள் தனுஷ்கா (1½). குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தையை பாம்பு தீண்டியது.

   குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.  உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அணைக்கட்டு காவல் துறை யினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  சாலை வசதி இல்லாத காரணத்தினால்தான் குழந்தை இறந்து விட்ட தாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்க ளுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.