தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலின்போது மக்களின் நலனுக்காக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை யும் 7.5.2021 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து படிப்படியாக நடை முறைப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, தமிழகம் முழுவதும் பணி புரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவிகள், தினசரி கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்க உத்தரவு பிறப்பித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்தின் மூலம், போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் எனவும் அறிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பால், கடலூர் மாவட்டத்தில் 2,80,85,841 பெண்கள் இதுவரைக்கும் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் செய்து பயனடைந்துள்ளனர். மேலும் 2,04,099 மாற்றுத் திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக 8,131 நபர்களும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். இதுமட்மின்றி, 19,987 திருநங்கைகளும் அரசின் சலுகையை பெற்று பயனடைந்திருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக முதலமைச்சர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை மென்மேலும் உயர்த்தும் என்று கடலூர் மாவட்ட மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரசின் சிறப்பு திட்டத்தால் பயனடைந்து வரும் பெண்கள் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பானுமதி முனியன், “நான் விருத்தாசலம் வட்டம் பரூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய வருமானத்தில் பேருந்து கட்டணத்திற்காக பெரும்பகுதியை செலவு செய்து வந்தேன். எனது குடும்ப வாழ்க்கை சுமூகமாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இலவச பேருந்து பயணத் திட்டம் என்னைப் போன்ற ஏழை பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியது” என்றார். கே.சுப்பையா (பிஆர்ஓ) ஜெ.பாலமுருகன் (ஏபிஆர்ஓ).