புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக சலவைத் தொழிலாளர்கள், மருத்துவ மரபினர் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு முடி திருத்தும் நாற்காலி, இஸ்திரி பெட்டி, தவில், நாதஸ்வரம் ஆகியவற்றை பயணாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துறை இயக்குநர் குமரன், உதவி இயக்குநர் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.