சிதம்பரம், செப். 28- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் சிதம்பரம் குறுவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கால்பந்து, கைப்பந்து, கடற்கரை கைப்பந்து, பூப்பந்து, சதுரங்கப் போட்டி, கோ கோ, எறிபந்து, இறகு பந்து, போட்டி களில் சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளி லிருந்து 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் வீனஸ் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தடகளப் போட்டியில் 13 பேர் முதலிடத்தை கைபற்றினர். பிடித்தனர். 11 மாணவர்கள் இரண்டாம் இடமும், 13 மாணவர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர். கால்பந்து, கைப்பந்து, கடற்கரை கைப்பந்து, பூப்பந்து போட்டியில் வீனஸ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். சதுரங்கப் போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், ஆசிரியர்கள் உமா, எப் சி மேரி, அருண் பாண்டியன் ஆகி யோரை பள்ளியின் தாளாளர் குமார், பள்ளி யின் முதல்வர் ரூபியல்ராணி, பள்ளி யின் தலைமை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி மற்றும் பள்ளியின் துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.