சிதம்பரம், பிப். 21- சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிதம்பரம் நடராஜர் கோயி லுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி புகழ்பெற்ற கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு கொலை மிரட்டல், பெண் பக்தர்கள் மீது தாக்குதல், சாதிய தீண்டாமை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் தீட்சிதர்கள் ஈடு பட்டு வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தாலும் அவர்களை கைது செய்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சங்கராச்சியாரை கைது செய்த காவல்துறை தீட்சிதரைக் கைது செய்ய ஏன் தயங்குகிறது? இதற்கு யார் தடையாக உள்ளனர் எனக் கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் அதற்குத் தடையாக இருக்க மாட்டார் என்பது அனை வருக்கும் தெரியும். அவர் ஒரு சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். நடராஜர் கோயில் சமூக விரோதிகள், சட்ட விரோதிகளின் புகலிடமாக மாறாமல் தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் இந்த கோயிலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிற்றம்பல மேடையில் அனைத்து பக்தர்க ளும் இலவசமாகத் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உச்ச நீதிமன்றத்தில் தீட்சி தர்களுக்கு ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்க ப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வைத்துக் கொண்டு அவர்கள் கோயிலில் ஆட்சி நடத்த முடியாது. ஊழியர்களாகத்தான் செயல்பட முடியும். கோவிலில் இவர்கள் காசுக்குத்தான் சேவை செய்கிறார்கள். யாராவது ரூ 1 கோடி கொடுத்தால் நடராஜர் சிலையை தூக்கி கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத் ்துவேன். சட்டமன்றத்திலும் இதுகுறித்து பேசப்படும். வழக்குப்பதிவு செய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் தீட்சிதர்களை கைது செய்யாததை கண்டித்து வரும் 26ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் கோவில் முற்று கையிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.