சிதம்பரம், மார்ச் 18- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதி யில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் (தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத் தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. 1957 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகு தியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை திமுக, 2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடைமடைபகுதி
சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும் பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொது மக்கள் அதிகளவில் உள்ளனர். இத்தொகுதியின்பிரதான அடை யாளங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக் காடுகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் திகழ்கிறது. புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரை வெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண் டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள் உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி இயற்கை வளங்க ளாக உள்ளது. இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. தீ களிமண், தரைவோடுகள், சூடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதி யாக உள்ளது.
குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதி களில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. கல் குவாரிகளும் அதிக அளவு செயல் பட்டு வருகிறது. தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது. இப்படிப்பட்ட சிதம்பரம் நாடாளு மன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற் பட்டவர்கள் உள்ளனர். தற்போது விசிக தலைவர் தொல். திருமா வளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி
இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியி னர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கள். விசிக கட்சியின்தலைவர் போட்டி யிடுவதால் இது நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாகவும் பார்க்கப் படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் கூட்டணி அரசியல் கட்சியினர் மத்தியில் உற்சாகமும் எதிர்முகாமில் பரபரப் பும் ஏற்பட்டுள்ளது.
- ஏ.காளிதாஸ்