சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை புதனன்று (அக்.25) தாம்பரத்தில் உதயமானது. இந்த கிளை பெயர் பலகை திறப்பு விழாவையொட்டி, ‘தீக்கதிர்’ வளர்ச்சி நிதியாக சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணனிடம் கிளை நிர்வாகிகள் ஆயிரம் ரூபாய் வழங்கினர். சிஐடியு மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாமோதரன், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஏ.எல்.கண்ணன், சிபிஎம் தாம்பரம் பகுதி செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.