அண்ணாநகர் டவர் பூங்கா கோபுரம் சீரமைப்பு
சென்னை,மே13- சென்னை அண்ணா நகரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப் ப்பட்டுள்ள ‘டவர்’ பூங்கா 135 அடி உயரம் கொண்டது். பூங்காவுக்கு தினசரி வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் வாக்கிங் செல்வோர் இந்த கோபுரத்தை நவீன பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கு மாறு மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கோபுரம் நவீன பாது காப்பு வசதிகளுடன் சீரமைக்கப் பட்டு வருகிறது. இந்த கோபுரத் தின் பக்கவாட்டு பகுதிகள் அனைத் திலும் தடுப்புகம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோபு ரத்தின் மேலே ஏறிச்செல்லும் போது யாரும் தவறி கீழே விழுந்து விடாத வகையில் பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கோபுரத்தில் புது வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. ஒருசில அசம்பாவித சம்ப வங்கள் நிகழ்ந்ததால் கடந்த 2011ம் ஆண்டு இந்த கோபுரம் மூடப் பட்டது. தற்போது 11 ஆண்டு களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு வசதிகளுடன் கோபுரம் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மரம் விழுந்து பெண் பலி்
திருவண்ணாமலை, மே 13- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் அடியோடு பெயர்ந்து கால்வாயில் விழுந்தது. அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்துகொண்டிருந்த பூங் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சுதா (38), பார்த்திபன் மனைவி மஞ்சுளா (35) மீது தென்னை மரம் விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவுத்துள்ள னர். மஞ்சுளா முதல் சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சுதாவின் கணவர் சங்கர் போளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டையில் 3.5 டன் ரோஸ்வுட் பறிமுதல்: 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை, மே 13- தேன்கனிக்கோட்டை அருகே மரங்களை வெட்டிக் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதி யில் இருந்து விலை உயர்ந்த அரிய வகை மரங்களை மர்ம நபர்கள் கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், வனவர் விஜய முருகன், வனக்காப்பாளர்கள் ஆறுமுகம் வெற்றி வேல் மற்றும் வன ஊழியர்கள் ஆகியோர் இருது கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் அந்த டெம்போவில் விலையுயர்ந்த அரியவகை மரங்களான ரோஸ்வுட் (ஈட்டி) மரங்கள் இருந்தது தெரியவந்தது. அப்போது வாகனத்தில் இருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்தனர். 2 நபர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 2 பேர் விசாரணை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (43), மசூத் (25) என்பதும், தப்பி ஓடியவர்கள் வன்னியபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (32) தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த சுஹேல் (42) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 3.5 டன் ரோஸ்வுட் மரங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.