சென்னை, மே 20 - சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். மேயர் ஆர்.பிரியா தலைமையில் இந்த மாத மன்ற கூட்டம் 30-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குப்பை அள்ள ஊழியர்கள் இல்லாததால் தெருக்களில் குப்பை தேங்குவதாக கூறும் கவுன்சிலர்கள் இந்த பிரச்சினையை தீர்க்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப் போவதாக தெரிவித்தனர்.