districts

சென்னை விரைவு செய்திகள்

108 பேர் கைது

விழுப்புரம்,ஏப்.3- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மது, தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, சூதாட்டம் மற்றும் லாட்டரி சம்பந்தமாக சோதனை நடத்தப்பட்டது.  இதில், சாராய வழக்கில் 63 பேரை கைது செய்து 96 லிட்டர் சாராயம் மற்றும் 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல், குட்கா வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1.5 கிலோ பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கஞ்சா வழக்குகளில் 5 பேரை கைது செய்து 380 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதுதவிர சூதாட்ட வழக்குகளில் 26 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.  ஒரே நாளில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 108 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.


மூதாட்டி பலி

செய்யாறு, ஏப்.3- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தி லுள்ள தொடக்கப் பள்ளியின் அருகே வெயில் தாக்கத்தால் சுமார் 80 வயது மூதாட்டி மயங்கி கிடந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜி பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

விழுப்புரம்,ஏப்.3- விழுப்புரம் மாவட் டத்தில் ஊட்டச்சத்து இரு வார நிறைவு விழாவினை முன்னிட்டு, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி கொடியசைத்து, துவக்கி வைத்தார்.  மாவட் டத்திலுள்ள 14 வட்டாரங் களில் செயல்படும் 1781 அங்கன்வாடி மையங் களில், சிறு தானியங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, ஊட்டச்  சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய இந்த பிரச்சாரம் நடை பெற்றது.