விழுப்புரம்,ஜூலை 23- குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட ரசாயன ஆலை கழிவுகளால் குழந்தைகள் உட்பட 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமம் ரயில் நிலையம் அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மண் போன்ற நீல நிற, கருப்பு நிற கலவை கொட்டப்பட்டுள்ளது. இவை ரசாயன ஆலை களில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுகளாக இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வரு னேஷ் (2), தமிழ் (5) என்ற 2 குழந்தைகளும், காந்தி மதி, வள்ளி என 4 பேர் மூச்சு திணறல், தொண்டை வலி, கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.