districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஆக 4- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில  பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய  லேசான மற்றும் மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரி விக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான , மிதமான  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27° செல்சியஸை ஒட்டி யும்  இருக்கக்கூடும் என அறிவிப்பு வெளியாகி யுள்ளது.

வியாசர்பாடியில் ஆவணமில்லாத  ரூ.14.75 லட்சம் பறிமுதல்

சென்னை, ஆக. 4- வியாசர்பாடியில் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டரூ.14 லட்சத்து 75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது ஹவாலா பணமா, என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் கிருபாநிதி தலைமையிலான போலீசார், வெள்ளியன்று வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், ரூ.14 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது. இதுதொடர்பாக விசாரித் ததில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சவுகார்பேட்டை மின்ட் தெருவைச் சேர்ந்த மோகன்லால் என்பதும், கலெக்ஷன் ஏஜென்ட் வேலை செய்வதாகவும் கூறினார். ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், போலீசார் மோகன்லாலை பிடித்து, பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மண்ணடியில் ரூ.50 லட்சம் கொள்ளை

சென்னை, ஆக. 4- சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் நவாஸ்கான்  என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது 5 பேர் கும்பல் அவரை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது. நவாஸ்கான் அளித்த புகாரை அடுத்து வடக்கு கடற்கரை போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கத்தியால் தாக்கியதில் காயமடைந்த நவாஸ்கான்  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்

தாம்பரம், ஆக.4- தாம்பரம் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சனிக்கிழமை முதல் வரும் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை  – தாம்பரம் வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், காலை 10.30  மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 மணி  வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலை யத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல் பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில்  நிலையம் வரையும், அதேபோல செங்கல் பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு ரயில் சேவை ரத்து குறித்த தகவல்கள் சரியாக தெரியாததால், அவர்கள்  கடும் சிரமத்திற்குளாகினர். அதோடு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வழக் கத்தை விட மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் 175 காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் ஈடு படுத்தப்பட்டனர். அவர்கள் உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர். தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் அனைவரும் தாம்பரம், இரும்புலியூர் பேருந்து நிலையம், இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிலையம்  மற்றும் தாம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களை பயன்படுத் திக்கொள்ளுமாறும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இதுகுறித்து தகவல் தெரியாத வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து கேட்டு எவ்வாறு செல்ல வேண்டும், எந்த பேருந்தில் பயணிக்க வேண்டும் என பணியில் இருந்த  போலீசார் ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...  முதல் பக்க தொடர்ச்சி

ஹோடா நவீன காவல்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மேற்கு மண்டலத்தின் புதிய ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வாய், காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ராதிகா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, திருநெல்வேலி சரக டிஐஜியாகவும். திருநெல்வேலி சரக டிஐஜி ஆக இருந்த பிரவேஷ் குமார் வடசென்னை சட்டம் - ஒழுங்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே டிஐஜியாக அபிஷேக் தீட்ஷித்தும், ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி துரை, காவல் துறை நலன் பிரிவுக்கு டிஐஜி ஆகவும், ஐபிஎஸ் அதிகாரி தேவராணி வேலூர் சரக டிஜஜியாக நியமனம்

குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8 ஆர்ப்பாட்டம்
மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஆக.4- நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சங்க கூட்டமைப்பு தலை வர் எஸ்.யுவராஜ் கூறுகையில்,“ தமிழ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு மாநிலம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் முழுமையாக ஆன்லைன் மூலம் மணல் வழங்கப்பட்டது. தற்போது மணல் வழங்குவது முற்றிலு மாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கட்டுமான தொழில், லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது”என்றார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக் கூடாது என்றும் பொதுப்பணித்துறை ஆறுகளில் இருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லை னில் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆக.8 ஆம் தேதி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30 மணல் லாரி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.