districts

img

வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

கடை வாடகைக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு விதித்திருப்பதையும் மாநில அரசு தொழில் உரிம கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தி இருப்பதையும், ஒன்றிய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்துக்கு சாதகமாகவும் சில்லறை வணிகத்துக்கு எதிராகவும் செயல்படுவதை கண்டித்து செவ்வாயன்று (டிச.3) சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவை தலைவர் எஸ். சௌந்தரராஜன் (எ) ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.