districts

மூளை பக்கவாதத்தால் பேசும் திறனை இழந்த சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

செனனை,டிச.26- மூளை பக்கவாதம் காரணமாக பேசும் திறனை இழந்த சென்னை பெண்ணுக்கு குரோம்பேட்டை  ரேலா மருத்துவ மனையில் உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் மீண்டும் பேசும் திறனை பெற்றார்.  மூளை பக்கவாதம் காரணமாக பேசும் திறனை இழந்த 41 வயது பெண் மருத்துவ பரிசோதனைக்காக இம் மருத்துவமனைக்கு வந்தார். இந்த நிலை யில் இம்மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர்கள் குழு அவரை பரிசோதித்ததில் அவரது மூளையின் "மொழி பகுதி யில்" பக்கவாதம் இருப்பதை கண்ட றிந்தனர். அதனைத் தொடர்ந்து  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் கை கால்களை அசைக்க முடிந்தது. ஆனால் அவரால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. இதன் காரணமாக அவர் தன்னுடைய எண்ணங்களையும் உணர்வு களையும் வெளிப்படுத்த முடியாமல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார் என்று மருத்துவமனையின் நரம்பியல் பிரிவு தலைமை டாக்டர் சங்கர் பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடத்தில் அவர் ஒருங்கிணைந்த பக்கவாதம் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  பக்கவாதம் மூளையில் உள்ள மொழிப் பகுதியை பாதித்ததன் காரணமாக வாயில் உள்ள கட்டமைப்புகளின் இயக்கங்களை திட்டமிடுவதற்கும் வார்த்தைகளை உருவாக்குவதற்கும் முடியவில்லை. இதனால் ஒருங்கிணைந்த பக்கவாதம் பிரிவு தீவிரம் கவனம் செலுத்தியதால் அவரது செயல்பாடுகளில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களை அடை யாளம் கண்டுகொண்டார். கைகளை உயர்த்துதல், கால் அசைவுகள் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினார். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு அவரால் பதி லளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சத்தம் போடுதல் மற்றும் சரளமாக பேசும் திறனை அவர் முற்றிலும் இழந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டதாக செவிப்புலன் அறிவியல் மையத்தின் தலைவர் ஸ்ரீமதி நரசிம்மன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் 4வது நாள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவருக்கு வாரத்திற்கு 3 முறை பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3 வாரப் பயிற்சிக்கு பின் அவர் சரளமாக பேசத் தொடங்கினார் என்று தெரிவித்தார்.