districts

img

உலக லூபஸ் நோய் தினம் அனுசரிப்பு

சென்னை, மே 11-

   சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மூட்டு, தசை இணைப்பு திசு நோய்களியல் துறை சார்பில் உலக லூபஸ் நோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

   நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் முதல்வர் எ.தேரணிராஜன் தலைமை தாங்கி பேசுகையில், நோயின் தன்மை குறித்தும், நோய் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு தங்களை   பாதுகாத்துக் கொள்ளும் முறை  குறித்து எடுத்துரைத்தார்.

   அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு பரிசு மற்றும் லூபஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

   சிறுநீரக துறை இயக்குநர் என்.கோபாலகிருஷ்ணன் பேசுகையில், லூப்பஸ் நோயினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு குறித்தும், பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்றார்.

   தோல் சிகிச்சை துறையின் தலைவர் ஏ.சம்பத் பேசுகையில், லூபஸ் நோயால் வரும் சரும பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் சூரிய ஒளி படுவதால் இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.