கிருஷ்ணகிரி,ஜன.1- ஓசூரில் மூன்றாவது ஆண்டாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க முயற்சியில் மனவளக்கலை மன்றம்,ரோட்டரி சங்கம் இணைந்து ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ கொண்டாட்டம் மாநகராட்சி பூங்கா முன்பு நடைபெற்றது. தலைவர் சண்முகம் தலைமையில் சமூக ஆர்வலர் ஒய்.வி.எஸ்.ரெட்டி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் விஜயராகவன் வரவேற்றார். நிர்வாகி சங்கர், குடியிருப்போர் சங்கம் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சு போட்டி யில் வெற்றி மாணவர்களுக்கு மாவட்ட தலைவர் சாந்தி, மாநிலச் செய லாளர் சேதுராமன், ஆலோசகர் ராசு உள்ளிட்டோர் புத்தகங்கள் பரிசாக வழங்கினர். செயலாளர் பாரதிதாசன் நன்றி கூறினார்.