districts

மெக்கானிக்கை பிடிங்க: சென்னை ஆணையர்

சென்னை, மார்ச் 1- அதிக சத்தத்தை எழுப்பும் கரு வியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டுள்ளதாக சென்னை காவல் துறை ஆணையர் தெரிவித் துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர்,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடியிருப்பு வாங்கித் தருவதாக மோசடி புகார் திருவொற்றியூர் காவல் நிலை யத்திற்கு வந்துள்ளது. அந்த புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது. நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள், மருமகன் ஆகியோர் தலை மறைவாக உள்ளனர். அதிவேக மாக வாகனத்தை இயக்குபவர் களை கண்டறிய 367 சந்திப்புக ளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதிக  சத்தம் எழுப்பக்கூடிய வாகனங் களை தயாரிக்கும் மெக்கானிக் ஷாப்களை கண்டறிந்து நடவ டிக்கை எடுக்க முடிவு செய்துள் ளோம். பள்ளி மாணவர்கள் வாக னங்கள் ஓட்டிச் செல்வதை பெற் றோர்கள் ஊக்குவிக்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.