திருவண்ணாமலை,ஜன.19- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்திற்கு உட்பட்ட எடைப்பிறை கிரா மத்தில் பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனைகள் பெறப்பட்டு, வீடு கட்டும் பணி நடந்து வருகிறது . அதற்காக கொடுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கெனவே அப்பகுதியில், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த ஆதிக்க சக்திகள், பழங்குடியின மக்கள் இங்கு சிமெண்ட் வீடு கட்டுவதா! என்ற ஆத்திரத்தில் சிமெண்ட மூட்டைகள் அடுக்கி தார்பாயால் மூடிவைத்திருந்ததை தீ வைத்து எரித்து உள்ளனர். இதனால் பழங்குடியின மக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.செல்வன், போளூர் வட்ட குழு செயலாளர் இரா.இரவிதாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் அ.உதயகுமார், எடைப்பிறை கிளை செயலாளர் விஜய் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிப்பை பார்வையிட்டு, அம்மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.