districts

img

போலி கொசுவிரட்டி திரவத்தை விற்ற கடை மீது வழக்கு

சோளிங்கர், செப்.8- ஆல் அவுட் கொசு விரட்டி  திரவத்தை போலியாக தயாரித்து விற்பனை செய்த கடையின் மீது காவல் துறையில் முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் பஜார் தெருவில் செயல்பட்டு வரும் லட்சுமி ஸ்டோரில் வேலூர் அறிவு சொத்து ரிமை அமலாக்கப் பிரிவி னர்  வியாழக்கிழமை (செப்.8) நடத்திய திடீர் சோதனை யின்போது இந்த போலி ஆல் அவுட் கொசுவிரட்டி திரவம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதியில் போலியாக ஆல்அவுட் கொசுவிரட்டி திரவம் மருந்து விற்பனை செய்யப் படுவதாக அதனை தயாரித்து விநியோகம் செய்யும் ஹரியானாவை சேர்ந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில்போலியான  ஆல் அவுட் திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அறிவு சொத்துரிமை மீறல் மற்றும் பொதுமக்களை ஏமாற்றிய தாகவும் லட்சுமி ஸ்டோர் மீது வேலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

;