அருப்புக்கோட்டை, ஜூன் 24- அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் வசிப்பவர் ஜெயலட்சுமி (40). இவருக்கும், அதே பகுதி யைச்சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரு மணமாகியது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரு வரும் கடந்த 12 ஆண்டுகளா கப் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது கணவரான வேல்முருகன் மீது ஜெயலட்சுமி ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இருவரும், அருப்புக்கோட்டை நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது, ஜெயலட்சுமியை நீதிமன்ற வளாகத்திலேயே அவரது கணவர் வேல்முருகன் தாக்கி யதுடன் கொலைமிரட்டலும் விடுத்தாராம். இதனால் வேல் முருகன் மீது அருப்புக் கோட்டை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.