districts

டிராக்டர் மீது கார் மோதல்: காங். வேட்பாளர் உள்பட 4 பேர் படுகாயம்

தியாகதுருகம், ஏப். 5- தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி  சார்பில் வேட்பாளர் மணிரத்தினம் போட்டியிடுகிறார். இவர்  உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உடன் அவரது மகன் அரவிந்தன் (28), கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச்  சேர்ந்த வேட்பாளரின் உதவியாளர் திருநாவுக்கரசு(44) ஆகி யோரும் இருந்தனர். கடலூர் மாவட்டம் கரிக்கா நகர் பகுதி யைச் சேர்ந்த கவுதம்(30) என்பவர் காரை ஒட்டினார். தியாகதுருகம் சின்னமாம்பட்டு பிரிவு சாலை அருகே வந்த  போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் வேட்பா ளர் மணிரத்தினம், அவரது மகன் அரவிந்தன், உதவியாளர்  திருநாவுக்கரசு, டிரைவர் கவுதம் ஆகியோர் படுகாயமடைந்த னர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;