districts

img

விலை உயர்வுக்கு முதலாளிகள் கொள்கையே காரணம்! சிஐடியு பிரச்சார கூட்டத்தில் எஸ்.கண்ணன் பேச்சு

திருவண்ணாமலை, மே 26-

    முதலாளிகள் ஆதரவு கொள்கையால் அத்திய வசிய பொருட்களின் விலை உயருகிறது என்றும் இதனால் ஏழை- எளிய மக்கள் பாதிக்கப் படுகின்றனர் என்றும் சிஐடியு மாநிலதுணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தெரி வித்தார்.

   விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெற்று வரும் நடை பயண பிரச்சாரக் குழுவினருக்கு திரு வண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உற்சாக வர வேற்பு கொடுத்தனர்.

    பின்னர் அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள் ளன. இதனால் அத்தி யாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயந்து வருவதால், ஏழை எளிய மக்கள், சாலை யோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் முதலாளித்துவ ஆதரவு கொள்கையே இந்த விலை உயர்வுக்கு காரணம்” என்றார்.

    ஆட்டோ உதிரி பாகங் கள் முதல் ஓட்டுநர் உரிமம் வரை அனைத்தையும் பெரு முதலாளிகளிடம் ஒப்ப டைக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் இயற்றி யுள்ளது. இந்த தனியார் மய, தாராளமய கொள்கை களை எதிர்த்து சிஐடியு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மத வெறுப்பு அரசியலை எதிர்க்கும் திமுக, தாராளமய கொள்கை களையும், அதானி, அம்பானிக்கு ஆதரவான கொள்கைகளையும் எதிர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பயணக்குழுவின் பொறுப்பாளர் கே. விஜயன், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் ஆ.தேவ ராஜ், இரா.பாரி, சிவா னந்தம், பரசுராமன்,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செய லாளர் ஏ.லட்சுமணன், சிஐடியு நிர்வாகிகள் கே. காங்கேயன், எஸ்.முரளி, சிவராஜ், மு.பாலாஜி, நாக ராஜன், எம்.வீரபத்திரன், கே.சரவணன், சேகர், கமலக்கண்ணன், வெங்க டேசன், கணபதி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.