சிதம்பரம் அருகே குமராட்சி கடை வீதியில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்கு ஏந்தி நடைபெற்ற போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ரேவதி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.