சென்னை, ஜூலை 24- வீட்டுவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு அம்பத்தூ ரில் தோழர்கள் தா.பாண்டியன், பன்னீர் செல்வம் நினைவரங்கில் ஞாயிறன்று (ஜூலை 24) நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.வி.ஜெகநாதன் ஏற்றினார். அம்பத்தூர் பகுதி செயலாளர் ஆர்.விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ப.மாரியப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி செயலாளர் அறிக்கையையும், வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மாநாட்டை நிறைவுரை ஆற்றினார். என்.கோபிநாதன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
சென்னையில் அதிகரித்து வரும் போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும், சென்னை மாநாகராட்சி வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு உயர்த்த திட்ட மிட்டுள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அனை வருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், யானை கவுனி மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், அம்பத்தூர் டிஐ சைக்கிள் ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15 பேர் கொண்ட மாவட்டக் குழுவின் செயலாளராக பா.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது.