districts

img

சொத்து வரி உயர்வை ரத்து செய்க: 7 மையங்களில் மனுகொடுக்கும் போராட்டம்

சென்னை, மே 10- சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட சென்னையில் 7 மையங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் பொருளாதா ரத்தில் பின்தங்கிய நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வால் அனைத்து அத்தி யாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.  மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎம்  வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாநகராட்சி மண்டல அலுவல கங்களில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று (மே 10) நடைபெற்றது. மணலி பகுதிக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர் ராஜன் தலைமையில் மண்டலம் 2  அதிகாரியிடம் மனுக்கள் அளிக்கப் பட்டன. இதில் பகுதிச் செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கொளத்தூர் மற்றும் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன்  தலைமையில் மண்டலம் 6 அலுவலகத்தில் மண்டல அதிகாரியிடம் அளிக்கப்பட்டது. இதில் திருவிக நகர் பகுதி செயலா ளர் வி.செல்வராஜ், கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். திருவொற்றியூரில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையிலும், பெரம்பூர், ஆர்கே நகர் பகுதி குழு சார்பில் மண்டலம் 4 அலுவலரிடம் பெரம்பூர் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் ரவிக்குமார், 41ஆவது மாமன்ற உறுப்பினர் விமலா ஆகியோரும் மனு அளித்தனர்.  மாதவரம் - செங்குன்றம் பகுதிக் குழு சார்பில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் மண்டலம் 3  அதிகாரியிடம் மனுக்கள் அளிக்கப் பட்டது. ராயபுரம் பகுதிக்குழு சார்பில்  பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தலைமையிலும் அம்பத்தூர்  பகுதிக்குழு சார்பில் பகுதிச் செயலா ளர் ஆர்.கோபி தலைமையிலும் மண்டலம்  அதிகாரியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.