சென்னை, ஜன. 23- பொதுமுடக்கத்தில் தளர்வு காண வேண்டும், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகள் கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் குறித்து தடுப்பூ சிகள், வழிகாட்டு நெறிமுறைகள், பொது முடக்க கட்டுப்பாடுகள், தண்டனை, அபராதத் தொகை உயர்வு என அனைத்தை யும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாயமும்,இதனால்அரசுக்கு ஏற்படும் அவப்பெயரையும், கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை பெருந்தொற்று பேரிடரின் பேரழிவு, பட்டியலிட முடியாத தாக்கத்தை பொது மக்கள் மட்டுமன்றி அடித்தட்டு வணிகர்க ளிடமும் ஏற்படுத்தியுள்ளது. பெருமளவு பாதிப்பு, மக்களின் பொருளாதார வீழ்ச்சியும், அன்றாட கூலி, முறைசாரா தொழிலா ளர்களின் வறுமையும்தான்.
கடந்தகால அனுபவங்களில் இருந்து அரசு நெறிமுறைப்படுத்த வேண்டியது விழிப்புணர்வு மக்களின் சுயக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவ முன்னெச் ்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே. ஒன்றிய அரசு கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திர வாக்கு மூலத்தில், தடுப்பூசி கட்டாயமல்லஎன்றும், இதர கட்டுப்பாடுகளும் தாமாகமக்கள் முன்வந்து ஏற்றுக்கொள்ள அறிவுறுத்த ப்பட்டுள்ளார்கள் என்றே பதிவு செய்துள்ளது. இக்கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய பரிசீலனை செய்து, இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக சுய கட்டுப்பாடுகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து, பொருளாதார முடக்கம் மேலும் நீட்டிக்கப்படாமல், தமிழகத்தில் பொருளாதாரம் மட்டுமன்றி 3 ஆண்டுகளாக தொடர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வணிகர்கள், பணியாளர்கள், அடித்தட்டு அன்றாட கூலிகள் ஆகியோரை மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படாத சூழலை உருவாக்கிட இரவுநேர பொது முடக்கம், ஞாயிறு முழு பொதுமுடக்கம் போன்றவற்றை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அரசு அறி வித்துள்ள அபராத உயர்வுத் தொகையை உடனடியாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங் ்களின் பேரமைப்பு சார்பில் முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.