சென்னை, ஜூலை 11-
திருவொற்றியூரில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணை யர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மழைநீர் கால்வாய் பணிகளை செவ்வா யன்று (ஜூலை 11) ஆய்வு செய்தார். முன்னதாக மண்டலம் இரண்டில் பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ஜோதி நகர் சடையங்குப்பம் இணைப்புச் சாலையில் கட்டப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பார்வையிட்டார். ஜோதி நகரில் இருந்து மணலி எக்ஸ்பிரஸ் சாலை யில் போக்குவரத்து பாதிக்காத வகை யில் ரெடிமேட் ப்ரீகாஸ்ட் மூலம் ஒரே நாளில் கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 3 மாதமாக பணி முழுமையாக முடிக்கப்படா மல், அங்கிருந்து பக்கிங்காம் கால்வாயை அடையும் கால்வாய் பணியில் சுமார் 80 மீட்டர் பணி முடிக்கப்படாமல் உள்ளது.
4ஆவது வார்டில் ரூ48 கோடி மதிப்பீட்டில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பணிகள் குறித்து வட்டார துணை ஆணையர் (வடக்கு) சிவகுருநாதன் ஆணையரிடம் விளக்கி னார். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதி காரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இதில் மண்டலத் தலைவர் தி.மு.தனிய ரசு, மண்டல அலுவலர் நவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், செயற் பொறியாளர் தணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.