விவசாயிகள் தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லி பட்டில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள் அன்புமணி விநாயகம், அரிதாஸ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.