districts

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மெட்ரோ ரயிலில் பயணிக்க வசதி

சென்னை, பிப். 1- டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவது போல மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. மெட்ரோ ரயில் பயணிக ளுக்கு பல்வேறு வசதி களை நிர்வாகம் செய்து வரு கிறது. மெட்ரோ ரயில் நிர்வா கம் எடுத்து வரும் நடவடிக் கையால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட  நேரம் வரிசையில் காத்து நிற்காமல் செல்லும் வகை யில் ‘கியூ ஆர் கோடு’, ஸ்மார்ட் கார்டு, டோக்கன் முறைகள் தற்போது நடை முறையில் உள்ளன. இந்நிலையில் பயணிகள் மேலும் எளிதாக பயணம் செய்யும் வகையில் டெபிட்  கார்டு, கிரெடிட் கார்டு பயண  திட்டத்தை அறிமுகம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி யுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதா வது: பயணிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பயணம் செய்ய ஏது வாக இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. வங்கிக் கணக்கு அடிப்படையில் இந்த வசதியை பெற முடி யும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்குவது போல மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமு கப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதியை பெற வங்கிக் கணக்கில் பணம் இருக்க  வேண்டும். இந்த கார்டு களை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் கட்டண  நுழைவு வாயிலில் ‘ஸ்கேன்’  செய்தால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பயணத் திற்கான கட்டணம் வசூலிக் கப்படும். தூரத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ப்படும். பயணம் தொடங்கும் நிலையத்தில் இருந்து முடியும் நிலையம் வரை யிலான பயண கட்டணம் கண க்கிடப்பட்டு இணையதளம் வழியாக வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்படும். இது முழுமையாக வங்கி மூலம் நடைபெறும் சேவை யாகும். இதன் மூலம் பயணி கள் எளிதாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய லாம். காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று  அவர்கள் தெரிவித்துள்ளனர்.