கள்ளக்குறிச்சி, பிப்.5- ஒன்றிய அரசின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்10 மையங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் புதனன்று (பிப்.5) கள்ளக்குறிச்சியில் ஒன்றிய அரசின் 2025-26க்கான பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமையில் நடை பெற்றது. இதில் வட்ட செயலாளர் பி.தெய்விகன், சிபிஎம்வட்டச் செய லாளர் வே.ஏழுமலை, தரணி ஆலை சங்க செயலாளர் ஜி.அருள் தாஸ்,விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.செல்வ ராஜ்,ஒன்றிய துணைத் தலைவர் பி.தங்கராசு, ஆர்.சாந்தமூர்த்தி, ஜக்கரியா,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன், மாவட்ட துணை தலைவர் வி.மலர்கொடி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ். ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டமானது சின்ன சேலம், சங்கராபுரம்,வாணாபுரம், திரு நாவலூர்கெடிலம், உளுந்தூர் பேட்டை, எலவனாசூர்கோட்டை, களமருதூர்,திருக்கோவிலூர்,எம்.குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.