இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்த ஒன்றிய அரசை கண்டித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னைக் கோட்டம் 2இன் சார்பில் பாரிமுனை, அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தலைவர் கே.மனோகரன், பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா, துணைத்தலைவர் வி.ஜானகிராமன் ஆகியோர் பேசினர்.