districts

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும்: நீதிமன்றம்

சென்னை, ஏப். 19 - பக்கிங்காம் கால்வாயி லுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதனை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இருந்து  புதுச்சேரி வரை ஆங்கி லேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக் கோரி 2014ல் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப் பட்டிருந்தது. பல ஆண்டு களாக நிலுவையில் இருந்த  இந்த வழக்கு செவ்வாயன்று (ஏப்.19) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கால்வாய்க்கு உள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார். ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு மறுவாழ்வு வழங்கு வது ஆக்கிரமிப்பை ஊக்கு விப்பது போன்றது என தெரி வித்த தலைமை நீதிபதி,  ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு  நீர்வழித்தடமாக இருந்த  பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழு வதுமாக மோசமடைந்துள் ளது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றார். பக்கிங்காம் கால்வாயை அழகுபடுத்தும்போது, நகரமும் அழகாகும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதை தொடர்ந்து பரா மரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது என குறிப் பிட்ட நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர் பான வழக்குகள் புதனன்று (ஏப்.20) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை யும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக் கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.