districts

img

பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது

சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்ற உள்ளனர். இது குறித்து தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காமல், கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதனை கண்டித்து ஞாயிறன்று (மே 28) சிவராஜபுரம், மாட்டா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.