districts

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஐடிஏ நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பதவி உயர்வுகளில் ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டுவதை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கொளஞ்சியப்பன் தலைமையில் தலைமை பொது மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.