திருவண்ணாமலை,ஜூன்12-
திருவண்ணாமலையை அடுத்த கேட்டவாரம் பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது, மூட்டை ஒன்றுக்கு 60 ரூபாய் வரை லஞ்சம் பெற்றதை கண்டித்தும், லஞ்சமாக பெற்ற பணத்தை விவ சாயிகளிடம் திரும்ப வழங்கக் வலியுறுத்தியும் திருவண்ணாமலை-வேலூர் சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன், எஸ். பலராமன், நிர்வாகி சாமிக் கண்ணு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து மண்டல மேலாளர் தேன்மொழி கூறுகையில், “சம்பா நவரை பருவத்திற் கான நேரடி நெல் கொள் முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி இரண்டாம் தேதி துவங்கி முடிவடையும் நிலையில் உள்ளது” என்றார்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் பெறப்பட்டது தொடர் பாக எழுந்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.