districts

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

மேல்மருவத்தூர்,மே 13- செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே உள்ள செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. கணவரை இழந்த இவர் வெளியூரில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். வியாழனன்று அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வெள்ளியன்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி ருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. மகள்களின் திரு மணத்திற்காக பரிமளா நகை, பணத்தை சேமித்து வைத்திருந்தார். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.