districts

வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை

அம்பத்தூர், பிப். 21- ஆவடி அருகே வெள்ளனூர் பாரதி நகரை சேர்ந்தவர் மாலதி. இவர் வீட்டை பூட்டி விட்டு ஞாயிற்றுக்கிழமை தம்பி நாகராஜா வீட்டுக்குச் சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது  பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டி ருந்த 32 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாலதி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த  பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்து வருகின்ற னர்.