தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் காவத்தூர் கிராமத்தில் உதயமாகி உள்ளது. இந்த கிளை துவக்க விழாவிற்கு கிளை செயலாளர் ஜோதிகா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச்செயலாளர் எஸ்.ராஜா, சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கிளை தலைவர் சித்ரா நன்றி கூறினார்.