districts

img

குத்துச்சண்டை போட்டி: கடலூரில் தொடங்கியது

கடலூர், செப்.23- மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.  2024 ஆம் ஆண்டின் முதலமைச்சர் கோப்பைக் கான திருவண்ணாமலை மண்டல அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் தொடங்கின. இதனை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் மகேஷ் குமார் தொடங்கி வைத்தார்.  இந்த போட்டி செப். 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடலூர், விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, தர்ம புரி, வேலூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 300 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.