விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வந்த புத்தக திருவிழா புதனன்று (ஏப். 5) நிறைவடைந்தது. அதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை மேலாண்மை இயக்குநர் முத்துமீனாட்சி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் சோ.தர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.