districts

சென்னை முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, செப். 4- சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம்  புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்  துறையினர் புதனன்று சோதனை செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு விடுத்த மர்ம நபரை  தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட னர். சமீபகாலமாக, கல்வி நிலையங்கள், சென்னை விமான நிலையம், தமிழக முதல் வர் சென்ற விமானம் என தமிழகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில்  34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கு முதல் கட்டமாக செப். 11 அன்று 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு செப்.9 துவங்கு கிறது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று, உதவி வேளாண் அலுவலரிடம் மகசூல் சான்று அடங்கல் பெற வேண்டும். நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்தில் ஆதார், சிட்டா மற்றும்  வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு வரவேண்டும். அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டும். விவசாயிகள் முன் பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரி வித்தால்  அதை உடனடியாக சரி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.