districts

மூன்றாம் நிலை நகரங்களில் உடல் உறுப்புகள் தானமாக கிடைத்தாலும் கொண்டுவருவதில் சிக்கல் மருத்துவர்கள் தகவல்

சென்னை,ஜூன் 19- நாகை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 3ஆம் நிலை நகரங்க ளில் உடல் உறுப்புகள் தான மாக கிடைத்தாலும் அவற்றை  மாநக ரங்களில் உள்ள மருத்துவ மனைக்கு கொணடு வருவதில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதாக பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுண ரும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் முன்னோடியுமான டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன்கூறினார்.

சென்னை சூளைமேடு எம்ஜி எம் மருத்துவமனையில் 30 மணி நேரத்திற்குள் நான்கு பேருக்கு இதயம், ஒருவருக்கு இரட்டை நுரை யீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களை செய்து சாதனை படைத்தி ருக்கும் அவர், தனது குழுவின ருடன் செய்தியாளர்களிடம் பேசி னார். மிகப்பெரிய சவாலை துணிச் சலுடன் ஏற்று எவ்வித பிரச்சனையு மின்றி நேர்த்தியாக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையை செய்து  முடித்ததாக அவர் கூறினார். உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்ட வர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு முன்னணி 

உடல் உறுப்பு தானத்தில் நாட்டி லேயே தமிழகம் முன்னணியில் உள்ள தாகவும் இதுகுறித்த விழிப்புணர்வு 2008 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது என்றும் அவர் கூறினார். விமான நிலையம் இல்லாத காரணத்தால் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளில்உடல் உறுப்பு கள் கிடைத்தபோதிலும் 4 மணி நேரத்திற்குள் தலைநகருக்கு கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது என்றார்.  ட்ரோன் மூலம் உடல் உறுப்பு களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதயம், நுரையீரல் போன்றவை இறந்தவர் உடலில் இருந்து அகற்றப் பட்ட 4 மணிநேரத்திற்குள் மாற்று உறுப்பு பொருத்தும் இடத்திற்கு கொண்டு வரப்படவேண்டும்  என்றும் அவர் கூறினார். பேட்டியின் போது  மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் கே.ஜி. சுரேஷ்ராவ் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.