75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவொற்றியூரில் ஞாயிறன்று (ஆக.7) ரத்ததான முகாம் நடைபெற்றது. கிளை தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற முகாமை மாவட்டச்செயலாளர் சரவணதமிழன் தொடங்கி வைத்தார். டாக்டர் நவீன்குமார், அகத்தியர் வித்யாலயா பள்ளி முதல்வர் கார்த்திக், வாலிபர் சங்க ரத்ததான கழக நிர்வாகி ஜபருல்லா, பகுதிச் செயலாளர் ஸ்டாலின், தலைவர் சேகுவேரா, பொருளாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர் இசக்கி நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.