அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவரும், மறைந்த சி.எச். பாலமோகனனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சுகாதார ஊழியர் சம்மேளன தலைவர் ஆர்.கீதா தலைமை தாங்கினார். சம்மேளன கௌரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் வானவரம்பன்,முனுசாமி, ஜவஹர் உள்ளிட்ட பலர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.