districts

img

100 நாள் வேலை கேட்டு வில்லியனூரில் முற்றுகை

புதுச்சேரி, செப்.4- புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், அரியூர் கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் வேலையை உடனே தொடங்க வலியுறுத்தி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரியை முற்றுகை யிட்டு போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஎம் அரியூர் கிளைச் செய லாளர் வைரக்கண்ணு உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து, அதி காரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் செப். 9 முதல் திட்ட பயனாளிகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.